Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Saturday, 11 April 2020

அடியார்க்கு பேரின்பம் தருவன

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

அடியார்க்கு பேரின்பம் தருவன

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் முருகனை கண்ணுதலான் (நெற்றிக் கண்ணுடைய சிவன்) தந்த கரும்பு என்று கூறுகின்றார்.

அந்த கரும்பு, யானை விரும்பி உண்ணுவது. தெய்வ-யானை அம்மை விரும்பி உண்ணும் கரும்பாக முருகன் உள்ளார் மற்றும் வள்ளி கொடி பற்றிப் படரவும் கொழுகொம்பு போன்ற கரும்பாக உள்ளார்.

இவ்விரு செயல்களை எண்ணும் தோறும் அடியார்களுக்கு இன்பு ஊறும் என்று சிதம்பர சுவாமிகள் பாடி உள்ளார்.

பாடல் கீழே:

கடவுட் பிடிக்கோர் களிப்பாகும் வள்ளிக்
கொடி சுற்றத் தானும் குலாவும் - அடியார்க்கே
எண்ணுதொறும் உள்ளத்தில் இன்பூறும் போரூரில்
கண்ணுதலான் தந்த கரும்பு

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment